Floating Facebook Widget

ஆன்லைனில் கண்களின் பார்வை திறனை இலவசமாக பரிசோதிக்க

0 comments
எல்லாவற்றிற்கும் இணையதளங்கள் என்ற காலத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இணையம் உபயோகிப்பவர்களின் எண்ணிக்கை அபரிமிதமாக வளர்ச்சி அடைவதால் தான் இணைய தளங்கள் புற்றீசல் போல உருவாகின்றன. இன்று சிறிய பிள்ளைகள் முதல் பெரியவர்கள் வரும் பொதுவான பிரச்சினை கண்களின் பார்வை குறைபாடு. முக்கியமாக கணினி உபயோகிப்பவர்களுக்கு இந்த பிரச்சினை உள்ளது. இதனால் நாம் மருத்துவரை அணுகி அதற்க்கான ஆலோசனைகளை கேட்டு அதன்படி கண்ணாடி அணிந்து கொள்கிறோம். நம்முடைய கண்களின் பார்வை திறன் எவ்வாறு உள்ளது என ஆன்லைனில் சுலபமாக மற்றும் இலவசமாகவும் பரிசோதிக்கலாம் என இங்கு பார்க்கலாம்.

கீழே உள்ள வழிமுறைகளை கடைபிடித்து ஆன்லைன் பரி சோதிப்போம் வாருங்கள்.


  • உங்கள் கணினி திரையின் அளவு 15" 17" 19" இவற்றில் ஏதேனும் ஒரு அளவில் இருக்க வேண்டும். 
  • உங்கள் கணினியில் Flash Player இன்ஸ்டால் செய்திருக்க வேண்டும். 
  • அடுத்து இந்த தளத்திற்கு Online Eye test செல்லுங்கள். அந்த தளத்தில் நீங்கள் கடை பிடிக்கவேண்டிய வழிமுறைகள் கொடுக்க பட்டிருக்கும். 
  • அந்த தளத்தின் கீழ பகுதிக்கு சென்றால் உங்களுக்கு கீழே இருப்பதை போல ஒரு பகுதி தெரியும் அதன் மீது கிளிக் செய்யுங்கள்.
  • அடுத்து உங்கள் கணினி திரையின் அளவை தேர்வு செய்து கொள்ளுங்கள்.
  • உங்கள் கணினி திரைக்கும் உங்கள் கண்களுக்கும் 3 அடி இடைவெளி விட்டு அமர்ந்து கொள்ளவும். 
  • அடுத்து உங்கள் சோதனை ரெடியாகும். உங்களுக்கு வரும் எழுத்துக்களை உங்களால் படிக்க முடிகிறதா என பார்த்து படிக்க முடிந்தால் Next கிளிக் செய்து அனைத்து நிலைகளையும் படித்து விடுங்கள்.
  • ஒருவேளை உங்களால் ஏதேனும் நிலையில் உள்ள எழுத்துக்களை படிக்க முடியவில்லை என்றால் Stop என்பதை அழுத்தி விடவும் நீங்கள் கண்டிப்பாக மருத்துவரை அணுக வேண்டும்.



இந்த சோதனை 100% துல்லியமானது அல்ல கண்களில் திறனில் ஏதேனும் பிரச்சினை இருப்பது போல உணர்ந்தால் உடனே நீங்கள் மருத்துவரை அணுகுவதே சாலச்சிறந்தது.

Read More »

நம்முடைய email-idஐ மறைத்து mail அனுப்பலாம்

1 comments
இணையத்தில் இலவச ஈமெயில் சேவை வழங்கும் நிறுவனம் பல உள்ளன. ஜிமெயில்,யாகூ,ஹாட்மெயில் போன்ற நிறுவனங்கள் பிரபலமானவைகள். இந்த தளங்களில் நாம் உறுப்பினர் ஆகி நமக்கென ஒரு முகவரியை உருவாக்கி கொண்டு அதன் மூலம் நம் நண்பர்களுக்கும் மற்றவர்களுக்கும் மெயில் அனுப்புகிறோம். ஆனால் நம்முடைய ஈமெயில் முகவரியை மறைத்து மற்றவர்களுக்கு ஈமெயில் அனுப்புவது எப்படி என பார்ப்போம். இதன் மூலம் நண்பர்களுக்கு உங்களின் முகவரியை மறைத்து அனுப்பி கிண்டல் பண்ணலாம், மற்றும் ஒரு சில அலுவலகங்களில் முக்கிய மெயில் தளங்களை முடக்கி வைத்திருக்கலாம் அது போன்ற சமயங்களிலும் இந்த முறை உங்களுக்கு உதவி புரியும்.


Anonymous Mail அனுப்ப இந்த தளத்தில் செல்லுங்கள். உங்களுக்கு அந்த தளம் ஓபன் ஆகி கீழே இருப்பதை போல இருக்கும். அதில் To என்ற இடத்தில் அனுப்ப வேண்டிய முகவரியை கொடுக்கவும்.


Message என்ற பகுதியில் நீங்கள் அனுப்ப வேண்டிய செய்தியை கொடுத்து பிறகு கீழே உள்ள Send Anonymously என்ற பட்டனை அழுத்துங்கள். அவ்வளவு தான் உங்கள் ஈமெயில் முகவரியை கொடுக்காமல் மற்றவர்களுக்கு மெயில் அனுப்பி விடலாம்.

இந்த முறையில் அனுப்பப்படும் ஈமெயில்கள் உடனே சென்று சேராது. அதிகபட்சம் 12 மணி நேரம் கூட ஆகலாம்.


Read More »

தகவல் அறியும் உரிமை சட்டத்தை அனைவரும் அறிய அரசின் இலவச ஆன்லைன் சான்றிதழ் பயிற்சிகள்

0 comments
தகவல் அறியும் உரிமை சட்டம் (RTI) என்பதை பல பேர் கேள்வி பட்டிருப்பீர்கள். RTI என்பது 2005 ல் இந்திய அரசால் கொண்டு வரப்பட்ட சட்டம். இந்த சட்டத்தினால் அரசாங்கத்தை பற்றியோ, அரசாங்க அதிகாரிகளை பற்றியோ ஏதேனும் தகவல் தெரிய வேண்டுமெனில் நீதிமன்றத்தை அணுகி பெற்று கொள்ளலாம். இதில் சில விதி விலக்குகளும், வரம்புகள்  உள்ளன.



இந்த சட்டத்தை பற்றிய விழிப்புணர்வை அனைவரையும் சென்றடையும் நோக்கில் இந்திய அரசு ஆன்லைன் பயிற்சிகள் கொடுத்து அதற்கான சான்றிதழும் வழங்குகிறார்கள்.  7 நாள் மற்றும் 15 நாள் இரு வகை பயிற்சிகள் உள்ளன. இருந்தாலும் 7 நாள் பயிற்சியை முடித்த பின்னரே 15 நாள் பயிற்சியில் சேர முடியும்.

7 நாள் கோர்சில் மொத்தம் 7 பிரிவுகள் இருக்கும் ஒவ்வொரு பிரிவிலும் நான்கு கேள்விகள் கேட்கப்படும் அந்த கேள்விகளில் 3 கேள்விகளுக்கு சரியான விடையை கொடுத்தால் தான் அடுத்த பிரிவிற்கு செல்ல முடியும்.


கோர்சில் சேருவதற்கான தகுதிகள்:
இந்திய குடிமகனாக இருத்தல் அவசியம்.
கணினியில் இணைய இணைப்பு இருக்க வேண்டும்.
கணினியில் பயர்பாக்ஸ், IE மற்றும் குரோம் உலாவிகளின் லேட்டஸ்ட் வெர்சன் வைத்திருக்க வேண்டும்.
கணினியில் PDF Reader மென்பொருள் இருத்தல் அவசியம்.
தேர்வுகள் ஆங்கிலத்தில் இருக்கும் என்பதால்  படித்து புரிந்து கொள்ளும் அளவு ஆங்கிலம் தெரிந்திருக்க வேண்டியது அவசியம்.

கோர்சில் சேர்வது எப்படி :
இந்த ஆன்லைன் கோர்ஸ்களில் சேர விரும்புபவர்கள் கீழ்காணும்  தளத்திற்கு சென்று Registration செய்ய வேண்டும்.
வெற்றிகரமாக பதிவு செய்த பின்னர் உங்களுக்கென ஒரு User Id மற்றும் Password உங்கள் மெயிலுக்கு அனுப்புவார்கள்.
அந்த விவரங்களை கொண்டு ஆன்லைன் கோர்ஸ் தளத்தில் நுழைந்து நீங்கள் கோர்ஸ் ஆரம்பித்து விடலாம்.
இதனை பற்றிய மேலும் தகவலுக்கு கீழே உள்ள இணைப்பில் சென்று விவரங்களை தெரிந்து கொள்ளுங்கள்.

User Manual for - 7 day Course
User Manual for - 15 day Course

Read More »

பாடல்களில் இருந்து இசையையும் குரலையும் பிரித்தெடுக்கும் தொழில்நுட்பம்

0 comments
பாடல்களில் இருந்து இசையையும் குரலையும் பிரித்தெடுக்கும் தொழில்நுட்பம்  தொடர்பில் இன்றும் பலருக்கு புரியாத ஒன்றாகவே இருக்கிறது. இப்பதிவின் மூலம் பாடல்களில் இருந்து இசையையும் குரலையும் பிரித்தெடுக்கும் தொழில்நுட்பம் பற்றியும், இதற்கு பயன்படும் மென்பொருட்கள் பற்றியும், இதில் உள்ள குறைபாடுகள் பற்றியும் குறிப்பிடுகிறேன்.நீங்களும் முயற்சித்து பாருங்கள்.


பாடல்களில் இருந்து இசையையும் குரலையும் பிரித்தெடுக்க வேண்டிய தேவை என்ன?

தொலைக்காட்சி, மேடை போன்ற இடங்களில் பாடகர்கள் பாடும் Live நிகழ்ச்சிகளில் பயன்படுத்த.

பின்னணி இசை எவ்வாறு பெறப்படுகிறது  ?

பொதுவாக TV நிகழ்சிகளில் பாடகருக்கான நிகழ்சிகளில். ஆனால் இங்கு திரைக்கு அருகில்/ பின்னால் ஒரு Music Group நின்று music, real time இல் இசைப்பார்கள். இதில் ஒரு சில பிழைகள் வர வாய்ப்பு உள்ளது. உயர் தர நிகழ்சிகளில் Studio இல் வைத்து தனியாக  record செய்த Background music இல் தான் பாடுவார்கள். இவ்வாறன தனி இசைகளை கடைகளில் பெற முடியும்.  ஒரு போதும் இவ்வாறான சந்தர்ப்பங்களில்  software மூலம் பாடலில் இருந்து இசையை பிரித்து எடுப்பது இல்லை.

Karaoke Software என்றால் என்ன?

சாதாரண மக்கள் – பாடுவதில் ஆர்வம் உள்ளவர்கள், உள்ளூர் இடங்களில் சிறு நிகழ்வுகளில் பாடுபவர்கள்  தமக்கான பின்னணி இசையை நிஜ பாடலில் இருந்து பிரித்து எடுக்க பயன்படும் மென்பொருள்.

Karaoke Software இன் திறன் என்ன?

Karaoke software மூலம் ஒருபோதும் 100% இசையை வேறாக்க முடியாது . அதுவும் இன்றைய நவீன  Music composing method இல் உருவான பாடல்களில் அறவே சாத்தியம் இல்லை. ஏன் என்றால் பல பின்னணி பாடகர்கள், தொடர்ந்து மாறுபடும் குரல்கள் , இசைகள், சடுதியான ஏற்ற தாழ்வுகள்… இப்படி ஏராளம். நீங்கள் Karaoke மென்பொருட்கள் மூலம் ஆரம்ப கால கருப்பு வெள்ளை படங்களில் உள்ள பாடல்களை ஓரளவு துல்லியமாக பிரித்து எடுக்கலாம்.

Karaoke Software இன் அடிப்படை  என்ன?

இவை தானாக அல்லது நீங்களாக மனித குரல், பாடல் என தெரிவு செய்யும் போது அதற்கு உரிய Frequency, வீச்சம் , பண்பு ஆகியவற்றை கொண்ட ஏனைய பகுதிகளையும் அந்த பாடல் முழுவதும் எடுக்கின்றன. இதுவே நாம் கேட்கும் போது பிரிக்கப்பட்ட வடிவமாக கேட்கிறது.

சில Karaoke Softwares

Karaoke Software என்று இணையத்தில் தேடினால் ஏராளமான மென்பொருட்கள் கிடைக்கும். அத்தனையும் பயனற்றவை. பொதுவாக எந்த Audio editing software மூலமும் மிகுந்த பிரயத்தனத்தில் ஓரளவு இசையை பிரிக்கலாம். பொதுவாக அறியப்பட்ட சில Softwares.

Sony Sound Forge Pro 10:

இது Audio editing software. ஆனால் இதில் நேரடியாக என வழியும் இசையை பிரிக்க இல்லை. நீங்களாக தான் முயற்சிக்க வேண்டும். 400$ மதிப்புள்ள இது Torrent இலும் கிடைக்கிறது. சாதாரணமானவர்கள் இதை பயன்படுத்துவது மிக கடினம்.

Adobe Audition CS6:

இதன் CS5  இல் தான் Avatar திரைப்பட இறுதி Audio editing செய்யப்பட்டது. அந்தளவிற்கு மிக பிரபலமானது.  ஒலியை வைத்து என்ன எல்லாம் செய்யலாமோ அதெல்லாம் இதில் உள்ளது. ஆனால் மேலுள்ளதை போன்று இதுவும் நேரடியாக Karaoke க்கு என்று எந்த வசதியும் இல்லை. நீங்களாக தான் முயற்சிக்க வேண்டும்.

மேலே சொன்ன இரெண்டும் karaoke க்கான மென்பொருட்கள் அல்ல. முன்னணி ஆடியோ எடிங் softwares.

இதுவே எவ்வித இடைஞ்சலும் இன்றி அனைவராலும் மிக இலகுவாக பயன்படுத்த கூடிய ஒரே ஒரு Karaoke software. ஒரு சில buttons மூலம் பாடல்களில் இசை, குரல் இரண்டையும் பிரித்து எடுக்கலாம்.

AV Music Morpher Gold 5

இதில் எப்போது உயர் ரக பாடல்களை பயன்படுத்தி ஓரளவு தரமான இசையை பெறலாம். இதும் கட்டண மென்பொருள் தான். Trial  இலவசம்  இதனுடன் Easy DJ mixer இலவசமாக கிடைக்கிறது. பெயருக்கு ஏற்றால் போல theme gold கலரில் நன்றாக இருக்கிறது,

இதன் Trail இல் முழுவதுமாக பாடல்களை பிரிக்க முடியாது. ஒன்றில் பணம் கொடுத்து வாங்க வேண்டும் . அல்லது crack செய்ய வேண்டும்.


Read More »

கம்ப்யூட்டருக்கு சாவி - பென்டிரைவ்

0 comments

உங்கள் வீட்டின் பூட்டிற்கு சாவி இருப்பதைப் போல...உங்களுடைய காருக்கு சாவி இருப்பதைப் போல. உங்களுடைய பெட்டி, பீரோவின் பாதுகாப்பிற்கு பூட்டு-சாவி இருப்பதைப் போன்று உங்களுடைய கம்ப்யூட்டருக்கும் ஒரு பூட்டுச்சாவி இருந்தால்... நன்றாகத்தானே இருக்கும்.

அந்த சாவி இல்லாமல் கம்ப்யூட்டரை ஓப்பன் செய்யவே முடியாது.

நீங்கள் அன்றாடம் பயன்படுத்தும் ஒரு USB பென்டிரைவ் மூலம் இதைச் செய்யலாம்.

பென்டிரைவ் என்பது கோப்புகளை சேமிக்கப் பயன்படும் ஒரு Removable Device. அதை எப்படி சாவியாக பயன்படுத்த முடியும்? என்ற கேள்வி எழுகிறதா?



முடியும் நண்பர்களே..!

இதற்கென இணையத்தில் ஒரு புரோகிராம் இருக்கிறது. அந்த புரோகிராமிற்கு பெயர் பிரிடேட்டர் (Predator). இது முற்றிலும் இலவசமான புரோகிராம்.

இனி உங்களிடம் உள்ள பென்டிரைவை, கம்ப்யூட்டரில் உள்ள USB போர்ட்டில் செருகினால் மட்டுமே உங்களுடைய கம்ப்யூட்டர் பயன்படுத்த முடியும். மற்றவர்கள் பயன்படுத்தவே முடியாது. அப்படியே பயன்படுத்த நினைத்தாலும் அக்சஸ் டினின்ட் (Access denied )அதிலிருந்து எடுத்துவிட்டால் கம்ப்யூட்டரைப் பயன்படுத்த முடியாது?

இந்த புரோகிராமை பயன்படுத்தி உங்களுடை பிளாஷ் டிரைவை  எப்படி கம்ப்யூட்டர் திறவுகோலாகப் பயன்படுத்துவது என்று பார்ப்போம்.


1. Predator Download இந்த புரோகிராமை உங்கள் கம்ப்யூட்டரில் இன்ஸ்டால் செய்துகொள்ளுங்கள்.
2. பிரிடேட்டர் மென்பொருள் இயங்கத்தொடங்கியவுடன், உங்களுடைய பென்டிரைவை கம்ப்யூட்டரில் இணைக்கவும்.
3. இணைத்தவுடன் ஒரு டயலாக்ஸ் பாக்ஸ் கிடைக்கும். பாஸ்வேர்ட் அமைத்திட கேட்கும். OK கொடுக்கவும்.
4. அடுத்து Preferences என்ற ஒரு விண்டோ கிடைக்கும். அதில் New Password என்றிருப்பதில் நீங்கள் மட்டும் தெரிந்துகொள்ளக்கூடிய வித்தியாசமான பாஸ்வேர்ட் ஒன்றை கொடுக்கவும்.
5. அடுத்துள்ள ஆல்வேஸ் ரெக்கொயர்ட் (Always Required) என்ற வாசகம் உள்ளதில் டிக் மார்க் ஏற்படுத்துங்கள். (இந்த செட்டிங்கானது நீங்கள் ஒவ்வொரு முறையும் கம்ப்யூட்டரில் பிளாஷ் டிரைவை செருகும்போதும் கம்ப்யூட்டர் பாஸ்வேர்ட் கேட்பதற்காக.)
6. அடுத்துள்ள ஃப்ளாஸ் டிரைவ் என்ற பிரிவில் உங்களுடைய பிளாஸ் டிரைவினைத் தேர்ந்தெடுக்கவும்.
7. இறுதியாக கிரியேட் கீ - Create key என்பதை அழுத்தி ஓ.கே கொடுத்து வெறியேறவும்.

அவ்வளவுதான் முடிந்தது. பிரிகேட்டர் புரோகிராமினை நீங்கள் சரியாக செட் செய்துவிட்டீர்கள். இப்பொழுது டாஸ்க் பாரில் பார்த்தால் பிரிகேட்டர் புரோகிராமின் ஐகான் இருக்கும். அதை அழுத்தினால் ஒரு சில வினாடிகளில் அந்த ஐகான் ஆனது பச்சை நிறத்தில் ஒளிர ஆரம்பிக்கும். பச்சை நிறமாக மாறியதும் பிரிகேட்டர் புரோகிராம் இயங்கத் தொடங்கிவிட்டது என்று புரிந்துகொள்ளுங்கள்.

30 வினாடிகளுக்கு ஒரு முறை பிரிகேட்டர் புரோகிராம் ஃப்ளாஷ் டிரைவ் கம்ப்யூட்டரில் இணைக்கப்பட்டுள்ளதா என சோதனையிடும்.
இணைப்படவில்லை என்றால் உங்களுடைய கம்ப்யூட்டரின் திரையின் வெளிச்சம் குறைந்து இயக்கம் நின்றுவிடும்.

இப்புரோகிராமின் இயக்கத்தை தற்காலிகமாக நிறுத்த டாஸ்க் பாரில் பாஸ் மானிட்டரிங் என்பதனைத் தேர்ந்தெடுக்கவும்.

உங்கள் Computer log செய்து இருக்கும்போது யாராவது பயன்படுத்த முயற்சி செய்தால் அதனை நீங்கள் கம்ப்யூட்டர் இயக்குகையில் டாஸ்க் பார் மெனுவில் உள்ள வியூ லாக் (View Log) மூலம் தெரிந்துகொள்ள முடியும்.

நீங்கள் உங்களுடைய கம்ப்யூட்டரில் பணிபுரிந்து முடிக்கும் வரை பென்டிரைவயும் USB Port -ல் இணைந்திருக்க வேண்டும்

இதற்காகவே ஒரு USB Drive வை நீங்கள் தனியாக பயன்படுத்த வேண்டும். அந்த யூ.எஸ்.பி. டிரைவ்தான் உங்கள் கம்ப்யூட்டருக்கு சாவி.

ஒவ்வொரு முறையும் கம்ப்யூட்டரை இயக்க விட்டு, இந்த சாவியை செருகினால்தான் கம்ப்யூட்டர் திறக்கும்.

ஒன்றுக்கும் மேற்பட்ட USB Port-கள் உங்கள் கணினியில் இருக்குமாறு பார்த்துக்கொள்ளுங்கள். இந்த சாவி செருகியிருக்கும்போது வேறு ஏதேனும் யூ.எஸ்.பி. டிரைவில் பைல் சேமிக்க வேண்டுமெனில் மாற்று யூ.எஸ்.பி போர்ட் கண்டிப்பாக உங்கள் கம்ப்யூட்டரில் இருக்க வேண்டும்.

முக்கியமான குறிப்பு: பிரிகேட்டர் புரோகிராம் மூலம் செட் செய்த யூஸ்.எஸ்.பி டிரைவை கம்ப்யூட்டரிலிருந்து நீக்கினால் உங்களுடைய கம்ப்யூட்டர் இயக்கத்தை நிறுத்திவிடும் என்பதை மட்டும் நன்றாக நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்...!


Read More »

கண்களை காக்க புதிய மென்பொருள்..!

2 comments
கணினி பயனர்களுக்கு, கணினியின் பாதுகாப்பு எவ்வளவு முக்கியமோ, அதைவிட கோடி மடங்கு முக்கியமானது உடல் நலன் பேணுவது. குறிப்பாக இரவும் பகலும் கணினியையே வெறித்துப் பார்த்துக்கொண்டிருக்கும் கண்களுக்கு அதிக பாதுக்காப்பு கொடுக்க வேண்டியது முக்கியம்.

பல் போனால் சொல்  போச்சு என்பார்கள்.. கண் போனால் இந்த உலகமே போய்விடும்.மாறி மாறி வரும் வெளிச்சத்தையும், கம்ப்யூட்டர் மானிட்டரிலிருந்து  வரும் அதிகளவு ஒளியையும் கண்கள் பார்த்துக்கொண்டே இருப்பதால் விரைவிலே சோர்வடைந்துவிடும்.

சோர்வடைந்த கண்களுக்கு ஓய்வு அளிப்பது முக்கியம். அதை 20-20 பார்முலா என்பார்கள். இதைப் பற்றி பெரும்பாலும் அறிந்திருப்பீர்கள்.

இவ்வாறு கண்களுக்கு ஓய்வளித்தாலும்,மானிட்டரின் ஒளியை மாற்றி அமைப்பதன் மூலம் கண்களைப் பாதுகாத்திட முடியும்.

உதாரணமாக பகல் நேரத்தில் மானிட்டர் திரையின் வெளிச்சம் குறைவாக இருக்கும். அதே இரவு நேரத்தில் மானிட்டர் வெளிச்சம் அதிகமாக இருக்கும். இது கண்களை கண்டிப்பாக பாதிப்புக்கு உள்ளாக்கும். பெரும்பாலானவர்கள் மானிட்டர் வெளிச்சத்தை பகலிலும், இரவிலும் ஒரே அளவிலேயே மாற்றமல் வைத்திருப்போம்.

அவ்வாறு மாற்ற நினைத்தாலும் ஒவ்வொரு முறையும் பகலிலும், இரவிலும் மானிட்டர் திரை வெளிச்சத்தை மாற்றி மாற்றி அமைத்துக்கொண்டிருக்க முடியாது.

தானாகவே மானிட்டர் வெளிச்சம் பகலிலும் இரவிலும் மாற்றிக்கொள்ளக்கூடிய வசதி இருந்தால் கண்களுக்கும் நல்லது. காட்சியும் சிறப்பாக அமையும். இந்த வசதியை ஏற்படுத்திக்கொடுக்கிறது எப்லக்ஸ் என்ற  மென்பொருள்.

இம்மென்பொருள் நீங்கள் பகல் நேரத்தில் பணிபுரிந்தால், அதற்கேற்ற வெளிச்சத்தையும், இரவு நேரத்தில் பணிபுரிந்தால் அதற்கேற்ற வெளிச்சத்தையும் மாற்றிக் கொடுக்கும். வெளிச்ச அமைவை நீங்களே தீர்மானிக்கலாம். அதற்கான வசதியும் இதில் உள்ளது.


மென்பொருளைப் பயன்படுத்தும் முறை: 


முதலில் மென்பொருளைத் தரவிறக்கம் செய்து உங்களுடைய கணினியில் நிறுவிக்கொள்ளுங்கள்.
1. Change Setteings  செல்லவும்.
2. Adjust Your Lighting For Day And Night: பகல் மற்றும் இரவில் எந்தளவிற்கு மானிட்டரில் வெளிச்சம் வேண்டும் என்பதைத் தெரிந்தெடுக்கவும்.
3. Set Your Location: இதில் Change என்பதை அழுத்தி, தோன்றும் மேப்பில் உங்களுடைய ஊரை தேர்ந்தெடுங்கள். அல்லது மேலிருக்கும் கட்டத்தில் உங்களுடைய பகுதியின் பெயரை டைப் செய்யுங்கள்.
4. Transition Speed: இந்த வசதியானது மானிட்டரின் வெளிச்சம் மாறும் நேரத்தை சிறிது சிறிதாக கூட்டுவதற்குப் பயன்படுகிறது. (ஒரு குறிப்பிட்ட நேரத்தில் மானிட்டரின் வெளிச்சம் திடீரென மாறுவதால் நீங்கள் குழப்பமடைவதை தவிர்க்கவும், கண்களுக்கு ஏற்றவாறு சிறிது சிறுதாக மானிட்டர் வெளிச்சம் குறையச் செய்வதற்கும், அதிகரிக்கச் செய்வதற்கு இந்த வசதி பயன்படும். இதில் உங்களுக்கு ஏற்றவாறு வெளிச்சம் மாறும் நேரத்தை மாற்றி அமைக்கலாம் )

விண்டோஸ் கணினிகளுக்கு மட்டுமல்லாமல், லினக்ஸ், மேக் கணனிகளுக்கும் இந்த மென்பொருள் பதிப்பு உள்ளது. எனவே அனைத்து கணினிப் பயனர்களும் இந்த மென்பொருளை தரவிறக்கம் செய்து பயன்படுத்தலாம்.

மென்பொருளைத் தரவிறக்கச் : Download 

கண்கள் எவ்வளவு முக்கியம் என்பதை தெரிந்துகொள்ள ஒரு இரண்டு நிமிடம் கண்ணை மூடிக்கொண்டு வழக்கமான வேலைகளைச் செய்துபாருங்கள்...! கண்டிப்பாக கண்களின் அருமை உங்களுக்குத் தெரியும்.

Read More »

தினமும் $10 வீட்டில் இருந்தே சம்பாதிக்கலாம்- clixsense

0 comments
இணையத்தில் பணம் சம்பாதிப்பது ஒன்றும் அவ்வளவு எளிய காரியம் அல்ல .PTC  PAID TO CLICK தளங்கள் ஒன்றும் கொட்டி கொடுத்து விடுவதில்லை .பல போலியான தளங்களும் இருக்கின்றது .ஆனால் இத்தளம் கடந்த 5 ஆண்டுக்கும் மேலாக சிறப்பான சேவையை அளித்து வருகிறது .வேறு எந்த தளமும் அளித்திராத பல சலுகைகளை இத்தளம் அளிக்கிறது

இத்தளம் நம்பகமானது என நீங்கள் நம்பவில்லையா? இதோ ptc-investigation தளத்தின் ஆய்வு முடிவினை பாருங்கள். http://ptc-investigation.com/clixsense.aspx

தேவையானவை:
1 .ஈமெயில் முகவரி
2 .அலார்ட் பே முகவரி (payza,paypal)
3 .சொந்த கணினி
4 .இணைய இணைப்பு

இவை நான்கும் உங்களிடம் உள்ளதா? அப்படியெனில் நீங்களும் clixsense ல் இணைந்து அதிக பணமீட்டலாம்.

1 .இணைவது எப்படி?

* இந்த லிங்கை கிளிக் செய்து clixsense தளத்திற்கு செல்லவும்.

* சென்றவுடன் அங்கு signup என்பதை சொடுக்கவும்.(ஒருமுறை மட்டும் தான் நீங்கள் register செய்யமுடியும் பலமுறை செய்தால் அனைத்து கணக்கும் முடக்கப்பட்டுவிடும் )

* வரும் விண்ணபத்தை பூர்த்தி செய்யவும்.பின் create account என்பதை சொடுக்கவும்.


*பின்னர் உங்கள் ஈமெயில் அக்கௌன்ட் குள்  நுழைந்து

verification link யை கிளிக் செய்யவும்.


* அவ்வளவுதான் clixsense உறுப்பினராகிவிட்டீர்கள்.




2 .விளம்பரங்களை பார்வையிடுவது எப்படி?

* முதலில் sign in செய்யவும்.

* பின் மேலே View Ads என்பதை சொடுக்கவும் .பின் வரும் பக்கத்தில் விளம்பரங்கள் கொடுக்கபட்டிருக்கும்.அவற்றில் ஒன்றை கிளிக் செய்யவும் உடனே இன்னொரு பக்கம் திறக்கும் அதில் சிறிது நேரம் காத்திருக்கவும்.




பின் காட்டப்படும்  இமேஜ் யை கிளிக் செய்யவும்.பின் ஒரு சிறிய தொகை உங்கள் கணக்கில் வரவு வைக்கப்படும்.

* இதே போல் எல்லா விளம்பரங்களையும் ஒன்றன் பின் ஒன்றாக சொடுக்கவும்.



3 .clixgrid ல் விளையாடி பணம் பெறுவது எப்படி?

* இந்த விளையாட்டை விளையாட பக்கத்தில் மேலே clixgrid என்பதை சொடுக்கவும்.

* இங்கு தோன்றும் படத்தில் மேல் 600 கட்டங்கள் கொடுக்கப்படும். அவற்றில் நீங்கள் சொடுக்கவேன்டியவை வெறும் 25 கட்டங்களே உங்களுக்கு பிடித்த 25 கட்டங்களை ஒன்றன் பின் ஒன்றாக சொடுக்கவும்.

* தினமும் இதை செய்தால் சில நாட்களிலேயோ,வாரங்களிலேயோ $5 கிடைக்கும். விரைவில் கிடைப்பதும் கிடைக்காமல் போவதும் உங்கள் திறமையை பொறுத்தது .

* நானும் இவ்விளையாட்டில் பணம் கிடைக்கும் என தினமும் க்ளிக் செய்தேன் நான்கே நாட்களில் $5 சம்பாதித்தேன் பின் ஒரு மாதத்தில் $10 கைக்கு கிடைத்தது

விடாமுயற்சியுடன் இத்தளத்தில் உள்ள விளம்பரங்களை பார்வையிட்டால் பணம் கிடைப்பது உறுதி.

Read More »

QR Code Imageஐ இனி கணினியில் ஸ்கேன் செய்யலாம்

1 comments
QR Code பெரும்பாலானவர்களுக்கு தெரிந்திருக்கலாம். QR Code என்பது ஒரு ரகசிய குறியீடாகும். இந்த QR Code படத்தினுள் Texts, Links, Phone Numbers, Email Address, vcards ஆகியவைகளை மறைத்து ரகசியமாக மற்றவர்களுக்கு பகிரலாம். சமீபமாக இந்த QR கோடினை பல்வேறு துறைகளில் பயன்படுத்த ஆரம்பித்து விட்டார்கள் இதில் முக்கியமானவை விளம்பர துறைகள், இணையதளங்கள், மொபைல் மென்பொருள் நிறுவனங்கள் போன்றவைகளாகும்.

இதுவரை  QR கோடினை மொபைல்கள் மற்றும் இணையதளங்களின் உதவியுடன் ஸ்கேன் செய்து வந்தோம். இனி இந்த QR Code படத்தினை நாம் உபயோகிக்கும் விண்டோஸ் கணினியில் எப்படி ஸ்கேன் செய்வது என்று பார்க்கலாம். QR Code Desktop Reader என்ற இலவச மென்பொருள் இந்த வேலையை சுலபமாக செய்கிறது.

உபயோகிப்பது எப்படி:
முதலில் இந்த Code Two QR Reader தளத்தில் சென்று மென்பொருளை டவுன்லோட் செய்து இன்ஸ்டால் செய்து கொண்டு மென்பொருளை திறந்து கொள்ளுங்கள்.
QR Code Image உங்கள் கணினியில் இருந்தால் From File என்பதை தேர்வு செய்து அந்த படத்தை தேர்வு செய்து கொள்ளவும்.
அல்லது QR Code Image ஏதேனும் இணையதளத்தில் இருந்தால் அந்த பக்கத்தை திறந்து கொண்டு இந்த மென்பொருளில் From Screen என்பதை கிளிக் செய்து அந்த QR Code Image ஐ தேர்வு செய்யவும்.

QR Code படத்தினை தேர்வு செய்தவுடன் அந்த படத்தில் மறைந்துள்ளதை இந்த மென்பொருள் காண்பிக்கும் அதனை உங்கள் கணினியில் சேமித்து கொள்ளும் வசதியும் இந்த மென்பொருளில் உள்ளது.


இனி QR Code image களை இந்த முறையில் சுலபமாக ஸ்கேன் செய்து கொள்ளலாம்.



Read More »

ICICI வங்கியின் இலவச Online bank account

0 comments
இந்தியாவின்  பிரபல வங்கியான ஐசிஐசிஐ தற்பொழுது புதிய இலவச ஆன்லைன் வங்கி கணக்கு சேவையை துவங்கி உள்ளது. இதற்கு B2 Digital Banking என்று பெயர் வைத்துள்ளனர். இந்த ஆன்லைன் வங்கி கணக்கின் மூலம் ஆன்லைனில் பணம் பரிமாற்றம் செய்வது மட்டுமின்றி மின்சாரம், தொலைபேசி போன்றவைகளுக்காண பில் தொகையும் செலுத்த முடியும். மற்றும் இந்த சேமிப்பு கணக்கில் நீங்கள் வைத்திருக்கும் தொகைக்கு வருடத்திற்கு 3.5% என்ற வட்டி விகிதத்தில் கூடுதல் பணமும் கிடைக்கும்.



இந்த B2 ஆன்லைன் கணக்கை துவங்க நீங்கள் எந்த விதமான கட்டணமும் செலுத்த தேவையில்லை மற்றும் zero balance-ல் கணக்கை தொடர முடியும்.  மற்றும் எந்த விதமான மறைமுக கட்டணமும் இல்லை. இந்த வங்கி கணக்கு தற்பொழுது சென்னை உட்பட சில இந்திய நகரங்களில் இருப்பவர்கள் மட்டுமே பெற முடியும்.

வழிமுறைகள்:

  • B2 ஆன்லைன் சேமிப்பு வங்கி கணக்கு வேண்டுவோர் இந்த லிங்கில் சென்று Apply here என்ற படிவத்தை பூர்த்தி செய்து வங்கிக்கு அனுப்பவும். 
  • பிறகு படிவத்தில் கொடுத்த ID Proof, Address Proof மற்றும் ஒரு கலர் போட்டோ வை வைத்திருக்கவும்.  
  • மூன்று நாட்களுக்குள் வங்கி நபர் உங்களை தொடர்பு கொண்டு இவைகளை பெற்று கொள்வார்கள்.
  • பின்பு உங்கள் கணக்கு தயாரானவுடன் ஈமெயில் மற்றும் SMS மூலமாக உங்களுக்கு தகவல் அனுப்புவார்கள். 
  • மற்றும் உங்கள் கணக்கின் Secret card உங்கள் முகவரிக்கு அஞ்சலில் அனுப்புவார்கள். அதன் மூலம் நீங்கள் B2 ஆன்லைன் கணக்கை ஆக்டிவேட் செய்து கொண்டு உபயோகித்து கொள்ளலாம். 
  • மேலும் ஏதேனும் தகவல் வேண்டுவோர் இங்கு சென்று பார்த்து கொள்ளவும்.



Read More »

3D Animationsஐ - வெறும் கண்களால் பார்க்கமுடியும்

0 comments
3D வீடியோ உருவாக்க இரண்டு அடுக்குகளான (இடது & வலது கண் ) video வை பதிவு செய்யப்பட்டு ஒன்றாக இணைக்கப்படும் . பின்னர் அதை 3D glasses கொண்டு இரண்டாக பிரித்து காண்பிக்கப்படும் .
ஆனால் பின்வரும் புகைப்படங்களில் இரண்டு படங்கள் கால இடைவெளியில் ஒன்றாக இணைக்கப்பட்டுள்ளன . எனவே இதை வெறும் கண்களால் பார்க்கமுடியும் .


Note: For better experience open the images in a new Tab



CAT
DRAGON
WATER
WOMEN
CAT2
JURASSIC PARK
CHINESE
WOODS
POST
ANIMAL
EYE


Read More »
back to top